திருப்பூரில் சாக்கடை கால்வாய் பணியால் சோகம் - சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

திருப்பூர் அருள்ஜோதிபுரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 10ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.



திருப்பூர்: அருள்ஜோதிபுரம் பகுதியில்சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.



திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்திற்குட்பட்ட அருள்ஜோதிபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழியின் காரணமாக அப்பகுதியில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர்கள் பலமிழந்து காணப்பட்டது.



இந்நிலையில் சாலைக்கும், வீட்டிற்கும் நடுவே தோண்டிய குழியின் இடைவெளியைக் கடக்க அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் அபிராம் என்ற மாணவன், மரப்பலகையைக் குறுக்கே போடுவதற்கு முற்பட்டபோது, வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அபிராம் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக சுவர் இடிபாடுகளை அப்புறப்படுத்தி மாணவனின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் அங்குப் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவனின் தந்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இறந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...