கோவையில் டிராவல்ஸ் ஊழியர் மீது தாக்குதல் - போதை இளைஞர் கைது

கோவை பீளமேடு பகுதியில் குடிபோதையிலிருந்ததால் பேருந்துக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த தனியார் டிராவல்ஸ் ஊழியர் கீர்த்தனா என்பவரை தகாத வார்த்தையில் பேசி, தாக்கிய வெங்கடேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பீளமேடு பகுதியில் டிக்கெட் கொடுக்க மறுத்த பெண் ஊழியரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு புதுரை சேர்ந்தவர் கீர்த்தனா (25). இவர் காந்திபுரம் முதலாவது வீதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்யும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணியிலிருந்த போது சென்னைக்கு செல்வதற்கு டிக்கெட் கேட்டு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் குடிபோதையிலிருந்ததால் கீர்த்தனா டிக்கெட் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி கீர்த்தனாவின் கன்னத்தில் தாக்கினார்.

பின்னர் கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து கீர்த்தனா கொடுத்த புகாரில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் இளம் பெண்ணை தாக்கியது சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்(44) என்பதும், டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...