உலக மகளிர் தினம் - கோவையில் கேக் வெட்டி கொண்டாடிய பெண் ஊடகவியலாளர்கள்!

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி வரும் பெண் ஊடகவியலாளர்கள், கோவை பிரஸ் கிளப் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். அவர்களுக்கு ஆண் ஊடகவியலாளர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.


கோவை: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி பெண்களுக்கு பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் அந்நிறுவனம் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை ஒட்டி கொண்டாட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்கள் கேக் வெட்டி மகளிர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆண் ஊடகவியலாளர்களும், அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...