கோவையில் சாலையோரம் நிறுத்திய கார் திருட்டு - போலீசார் விசாரணை!

கோவை ராம்நகரை சேர்ந்த சிவா என்பவர், தனது மாருதி 800 காரை கோகலே தெருவில் சாலையோரம் நிறுத்தி சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது கார் திருடப்பட்டதை அறிந்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ராம் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவா (வயது41). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது தந்தை உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவ்வப்போது மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் சென்றுவர மாருதி 800 காரை பயன்படுத்திவந்துள்ளார்.

வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வந்த சிவா, கோகலே தெருவில் உள்ள சாலையோரம் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டுவிட்டு காரை எடுக்கலாம் என்று வந்து பார்த்தபொழுது கார் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் TN01 U2507 என்ற ரெஜிஸ்ட்ரேஷன் என்னைக் கொண்ட வெள்ளை நிற மாருதி 800 கார் மர்ம நபர்கள் திருடி விட்டதாக சிவா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கார் திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...