கோவையில் சாலையோரம் நிறுத்திய கார் திருட்டு - போலீசார் விசாரணை!

கோவை ராம்நகரை சேர்ந்த சிவா என்பவர், தனது மாருதி 800 காரை கோகலே தெருவில் சாலையோரம் நிறுத்தி சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது கார் திருடப்பட்டதை அறிந்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ராம் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவா (வயது41). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது தந்தை உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவ்வப்போது மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் சென்றுவர மாருதி 800 காரை பயன்படுத்திவந்துள்ளார்.

வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வந்த சிவா, கோகலே தெருவில் உள்ள சாலையோரம் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டுவிட்டு காரை எடுக்கலாம் என்று வந்து பார்த்தபொழுது கார் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் TN01 U2507 என்ற ரெஜிஸ்ட்ரேஷன் என்னைக் கொண்ட வெள்ளை நிற மாருதி 800 கார் மர்ம நபர்கள் திருடி விட்டதாக சிவா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கார் திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...