பொள்ளாச்சியில் குண்டும் குழியுமான சாலைகள் - சாலையில் வாழைமரத்தை நட்டு பாஜகவினர் போராட்டம்

உடுமலை - கோவை சாலையில் தலைமை தபால் நிலையம் முன்பு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படுவதாக கூறி கோவை மாவட்ட தலைவர் பரமகுரு தலைமையில் பாஜகவினர், சாலையின் நடுவே வாழை மரத்தை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.



மேலும், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் ஆங்காங்கே சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள உடுமலை - கோவை சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு சாலை பல நாட்களாக குண்டும் குழியுமாக காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி நகர பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் பரமகுரு தலைமையில், பழுதடைந்த சாலையின் நடுவே வாழை மரத்தை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களையும் அவர்கள் எழுப்பியதால் தபால் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தால் கோவை - உடுமலை - பொள்ளாச்சி சந்திப்பு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...