கோவையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 2.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கோட்டைபுதூர் அருகே கேரளாவுக்கு கடத்துவதற்காக சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 2.2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட நிஜாமுதீன் மற்றும் ஜபாருல்லா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கோட்டைபுதூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வந்த நிலையில், அதனை கண்காணிக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு கூடுதல் இயக்குனர் அருண் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கோவை கரும்புக்கடை, ஜி.எம்.நகர், கோட்டை புதூர் ஆகிய பகுதிகளில் திடீரென ரோந்து சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டை புதூர் ஜமீன்தார் நகர் பகுதியை சேர்ந்த ஜபாருல்லா என்பவருக்கு சொந்தமான கார் செட்டில் நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்ட போது, அதில் தலா 45 கிலோ என 50 மூட்டைகளில் 2.2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் போத்தனூர் திருமலை நகர் பகுதியில் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பல்வேறு பகுதிகளில் சேகரித்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றுள்ளார். போலீசாரின் வாகன சோதனை மிகவும் தீவிரமாக இருந்ததால் ஜபருல்லாவிக்கு சொந்தமான கார் செட்டில் ரேசன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2.2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அரிசியை பதுக்கி வைத்த நிஜாமுதீன் மற்றும் இடத்தின் உரிமையாளர் ஜபாருல்லா ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...