முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கியத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கியம் பகுதியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச கண்ணாடிகளை வழங்கினார்.



திருப்பூர்: அலங்கியம் பகுதியில் முதல்வர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பகுதியில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை அமைச்சர் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் அலங்கியம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன் கலந்து கொண்டார்.



இந்த முகாமில் ஜே.எஸ்.டபிள்யூ இந்தியா விஷன் இன்ஸ்டியூட் சார்பில் மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு கண் குறைபாடுகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான கண் கண்ணாடிகளை வழங்கினர்.



இதில் அலங்கியம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் பொதுமக்கள் கலந்து கொண்டர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அலங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி குப்பு, ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, சின்னக்கம்பாளையம் பேரூராட்சி செயலாளர் பன்னீர்செல்வம், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சசிகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...