எப்ஐசிசிஐ லேடீஸ் அமைப்பின் கோவை பிரிவு சார்பில் கோவையில் மகளிர் தொழில்முனைவோர் “புஃளோ பஜார் 2017”

எப்ஐசிசிஐ லேடீஸ் அமைப்பின் கோவை பிரிவு சார்பில் கோவையில் மகளிர் தொழில்முனைவோர் “புஃளோ பஜார் 2017” கண்காட்சி மற்றும் விற்பனை பிப்ரவரி 18ம் தேதியன்று துவங்கி ஞாயிறன்று (இன்று) நடைபெற்று வருகிறது. 



ஃபிக்கி (எப்ஐசிசிஐ) லேடீஸ் ஆர்கனைசேஷனின் கோவை பிரிவு சார்பில், மகளிர் தொழில் முனைவோர் பொருட்காட்சி, “உமன் என்டர்பிரனர் பஜார் 2017” எனும் பெயரில் கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமணமண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, தயாரிக்கப்படும் மகளிர் உற்பத்தி பொருட்கள் இங்கு 6-வது ஆண்டாக கண்காட்சியாக நடைபெற்று வருகிறது.

கோவையில் பெண் தொழில் முனைவோர், ஆண்களுக்கு சவாலாக பல பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கின்றனர். இந்த கண்காட்சி விரிவான தொடர்புகள் மற்றும் மேம்பாட்டுக்கு, மகளிருக்கு உதவும் ஐடியாக்களை பகிர்ந்து கொள்ளுதல், புதிய வாய்ப்புகள் என்று உற்சாகமாக தகவல் பரிமாற்றம் பெற்று பயன்பெறவும் இந்த பொருட்காட்சி பெரிதும் உதவுவது கடந்த கால அனுபவமாகும். முழுமையாக, வணிக வளர்ச்சிக்கு பலவகையிலும் மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துகிறது. 

துவக்க நிலையிலுள்ள மகளிர் தொழில் முனைவோர், இடைநிலையில் உள்ளவர்கள், டாப் இடத்தில் உள்ளவர் என்று அனைவரும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.



இதில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஃபாஷன் உடைகள், சாரீஸ், சல்வார், பிளாக் பிரிண்ட்ஸ், காலனிகள், டெரகோட்டா ஜீவல்லரி, வெள்ளி மற்றும் செயற்கை ஜுவல்லரி, கற்கள் பதித்த ஆபரணங்கள், லினன், வீட்டு அலங்காரம் மற்றும் பரிசுப் பொருட்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பான தயாரிப்புகள் இன்ஜினியரிங் பொருட்கள் என ஏராளமான மகளிர் படைப்புகள் வாங்கலாம்.



முன்னதாக இந்த கண்காசியின் துவக்க விழாவில் கோவை, சுகுணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சுகுணா லட்சுமி நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...