மடத்துக்குளம் அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி - போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

மடத்துக்குளம் அருகேயுள்ள மெட்ராத்தி பகுதியில் 80 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை வனத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி உயிருடன் காப்பாற்றினர்.

மடத்துக்குளம் அடுத்த மெட்ராத்தி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது 6 மாதம் வயதுடைய நாட்டு காளைக்கன்று ஒன்று எதிர்பாராத விதமாக தோட்டத்திலுள்ள கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் சுமார் 40 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இந்நிலையில், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை மீட்க முடியாத நிலையில், உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.



உடனடியாக நிலைய அலுவலர் கோபால் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் கயிறுகள் உதவியுடன் கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி கன்றை பத்திரமாக மீட்டனர்.



கிணற்றில் தத்தளித்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டவுடன் கிணற்றின் அருகே நின்றிருந்த தாய்ப்பசுவிடம் உற்சாகமாய் தாய்ப்பால் அருந்தியது அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

மடத்துக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் கைகூப்பி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...