12 பீகார் தொழிலாளர்கள் கொலை - வதந்தி பரப்பிய பாஜக பிரமுகர் மீது வழக்கு

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 பீகார் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக, சமூக வலைதளத்தில் தவறான தகவலைப் பரப்பிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் என்பவர் மீது தமிழக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தியைப் பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டன. இது தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.



விசாரணையில், இந்த வீடியோக்கள் போலியானது என்றும், இந்த வீடியோகளுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.



தற்போது, தமிழ்நாட்டில் இந்தி பேசியதால் 12 பீகார் தொழிலாளர்கள், கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக சமூகவலைதளங்களில் தவறான தகவலை பரப்பிய உத்தர பிரதேச மாநிலம், பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் என்பவர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.



பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பொய்யான தகவல் பரவியதை அடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு காவல்துறையை தொடர்பு கொள்ள 0421-2203313, 9498101300, 9498101320 உதவி எண்களை வெளியிட்டுள்ளது.



இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசும், பீகார் அதிகாரிகளும் இன்று மாலை ஆலோசனை நடத்துகின்றனர். மறுபக்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...