கோவை ஆர்.எஸ் புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்! - வாகன ஓட்டிகள் அவதி

காந்திபுரம், ஒண்டிபுதூர், டவுன்ஹால் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை வழியாக தான் செல்கிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


கோவை: ஆர்.எஸ் புரம் டிபி ரோட்டில் இருபுறங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவையில் ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். காந்திபுரம், ஒண்டிபுதூர், டவுன்ஹால் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இந்த சாலை வழியாகத் தான் செல்கிறது.

இதுதவிர இந்த பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாகப் பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதிக்கு வருகின்றனர்.

இதனால் எப்போதும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இந்த சாலையின் வலது புறமும், இடது புறமும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

இந்த சாலையில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்கச் செல்கிறார்கள். அவர்கள் வரும் வரை அந்த கார் அங்கேயே நிற்கும்.

இதனால் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையின் ஒரு புறத்தில் மட்டும் தான் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும் எனப் போக்குவரத்து போலீசார் கூறினர். விதிமுறை விதித்துள்ளனர். அனைவருமே அதனை கடைபிடித்து வந்தனர். ஒரு மாதம் வலது புறமும், மற்றொரு மாதம் இடது புறமும் நிறுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

அதன்படி அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி வந்தனர். ஆனால் தற்போது போலீசார் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால் பகுதிக்கு 4 சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையின் இரு புறங்களிலும் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால் பல நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முன்பு போலீசார் வந்து வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

ஆனால் தற்போது கண்டுகொள்வதில்லை. இதனால் அனைத்து வாகன உரிமையாளர்களும் அவர்கள் இஷ்டத்திற்கு வாகனத்தை விட்டு செல்கிறார்கள். எனவே வாகனங்களை வரைமுறைப்படுத்தி நிறுத்தினால் மட்டுமே இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...