கொடநாடு கொலை வழக்கு - செல்போன் எண்களை தீவிரமாக ஆராயும் சிபிசிஐடி!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, அந்த மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு பதிவான செல்போன் எண்கள், பிற மாவட்டங்களுக்கு சென்ற அழைப்புகளை கண்டறியும் பணிகளை சிபிசிஐடி போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் கடந்த 2017-ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான போலீசார் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முதலாவதாக சம்பவம் நடந்த காலத்தில் நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்த முரளிரம்பா-க்கு சமன் வழங்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட் மேலாளர் உள்ளிட்ட பல்வேறு சாட்சியங்களை சிபிசிஐடி போலீசார் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் சம்பவம் நடந்த 2017ல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்கள் குறித்து இதுவரை நடந்த விசாரணையின்போது பதிவுகள் ஏதும் பெறப்படாத நிலையில், பிஎஸ்என்எல் செல்போன் தலைமை அலுவலகமான திருச்சி அலுவலகத்தில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு நீலகிரியில் பதிவான செல்போன் பதிவுகளை சேகரிக்கும் பணியை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தினர்.

முதல் கட்டமாக டேப் வடிவில் உள்ள அந்த பதிவுகளை டிஜிட்டலாக மாற்றி தகவல்களைப் பெறும் வகையில் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு பிறகு, சம்பவம் நடந்தபோது எந்தெந்த செல்போன் எண்கள் யார் யாருடன் இணைப்பில் இருந்தது மற்றும் சந்தேகப்படும் நபர்கள், வழக்கில் தொடர்புடைய நபர்களின் எண்கள் என முழுமையாக எடுத்து விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...