உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒப்பந்த பணியாளர் முறையை கைவிடுவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ‌‌ஏஐடியூசி உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் நகராட்சி பகுதியில் ஒப்பந்தம், வெளிச்சந்தை, தினக்கூலி, சுய உதவி குழு போன்ற முறைகளை கைவிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டது.



மேலும், பழைய ஓய்வூதியம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், தற்பொழுது பணி புரிந்து வரும் நிரந்தர தொழிலாளர்களை வேறு இடத்திற்கு வேறு வேலைக்கு மாற்றக்கூடாது, தற்பொழுது பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களின் சர்வீஸ் பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ‌சரவணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் நாகராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணசாமி. செளந்தரராஜன். சுப்பிரமணியம் உள்ளிட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...