சிங்காநல்லூரில் மதுபோதையில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த தச்சு வேலை செய்து வந்த ராம்கி என்பவர் மதுபோதையில் வீட்டின் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே வீட்டின் மாடியில் மதுபோதையில் செல்போன் பேசிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராம்கி(35) தச்சு தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடிப்பழக்கம் கொண்ட ராம்கி நேற்றைய தினம், அவரது வீட்டின் மாடியில்மதுபோதையில் நடந்தபடி, செல்போன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென மாடியிலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அவரது மனைவி சிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் மாடியிருந்து கீழே விழுந்து ராம்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...