திருப்பூர் மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு - நோயாளிகளிடம் குறைகேட்பு!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், திடீரென திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் பெருச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1170 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.



இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 700 முதல் 750 உள்நோயாளிகளுக்கும் 2000 முதல் 2500 வெளி நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், போதை தடுப்பு பிரிவு , ஆதரவற்றோர் மனநல பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வரக்கூடிய இந்த மருத்துவமனையில் ஆட்சியர் வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்த ஆட்சியர், அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...