ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கை - காங்கிரஸ், திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால் திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் வெற்றிக் கொண்டாடட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது.

75% வாக்குப்பதிவு பதிவான நிலையில், சித்தோடு அருகே உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.



காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்கு எண்ணப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகிய வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் தொடர்ந்து தபால் வாக்கு மற்றும் முதல் சுற்று இரண்டாம் சுற்று அடிப்படையில் முன்னிலை வகுத்து வருகிறார்.

இரண்டாம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் 23 ஆயிரத்து 321 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு 8124 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1498 வாக்குகளும், தேமுதிக 184 வாக்குகளும் பெற்றுள்ளனர்.



ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருவதால், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே சேலம் முதல் கோவை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிய தொடங்கியுள்ளனர்.



மேலும், பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது வெற்றி கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து துண்டுப்பிரசுரமும் அச்சிடப்பட்டு திமுகவினர் சார்பில் பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றிக் கொண்டாட்டங்களால் ஈரோடு கிழக்குத் தொகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...