தேர்தல் ஆணையர் நியமன தொடர்பான வழக்கு - நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை முடிந்த நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு இரு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.


தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தி சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்தாண்டு நவம்பர் 23ஆம் தேதி விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணையின் போதும், அரசு தரப்பு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியது.

அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? நான்கு அதிகாரிகளில் அருண் கோயலை தெரிவு செய்தது எப்படி? என்பது போன்ற கேள்விகளை நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்வைத்தது.

தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டதோடு, வழக்கு குறித்த மத்திய அரசு, மனுதாரர்கள் ஐந்து நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்க உள்ளது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...