கோவையில் குப்பைமேட்டில் திடீர் தீவிபத்து - மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

கோவை செங்காளியப்பன் நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.



கோவை: கோவை அடுத்த செங்காளியப்பன் நகர் பகுதியில் ரயில்வே பிரிட்ஜ் அருகாமையில் குப்பைமேடு ஒன்று இருந்தது.



அதில் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்ததால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.

இதனால் தீயால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமூக விரோத கும்பல் புகைபிடித்து விட்டு நெருப்புடன் பீடி சிகரட்டை குப்பையில் போடுவதாலும், சிலர் வேண்டுமென்றே குப்பைமேடுகளில் தீ பற்ற வைப்பதாலும் இது போன்ற விபத்துகள் நடக்கின்றன.



முறையாக குப்பைகளை அப்புறப்படுத்துவதும், சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதும் அவசியம் என்ற அடிப்படையில் மாநகராட்சி கூடுதலாக கவனம் செலுத்தி கோடை காலத்தில் தீவிபத்துகள் ஏற்படும் முன்னே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...