உடுமலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்

உடுமலை தலைமை அஞ்சலக பணியாளர்களுக்கு, உடுமலை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை உடுமலை தலைமை அஞ்சலக அதிகாரி கீதா தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: உடுமலையில் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தலைமை அஞ்சலக பணியாளர்களுக்காக உடுமலை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை உடுமலை தலைமை அஞ்சலக அதிகாரி கீதா தொடங்கி வைத்தார். உதவி அஞ்சலக அதிகாரி செல்வராஜன் முன்னிலை வகித்தார்.

இம்முகாமில், உடுமலை தலைமை அஞ்சலக பணியாளர்கள், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த, கிளை அஞ்சலகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

சித்த மருத்துவர்கள், கார்த்திகேயன், ஸ்ரீபப்பி, மருந்தாளுநர் பெனிலா, மருத்துவமனை பணியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட குழுவினர், சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை, அரசு மருத்துவ மனை சித்த மருத்துவ அலுவலர் லட்சுபதிராஜ், ஓய்வு பெற்ற அஞ்சலர் முகமது அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...