கோவையில் அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - போலீசார் விசாரணை

கோவை காந்திபுரம் சிக்னலில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் ஒருவர் காயமடைந்தார். காலை நேரம் என்பதால் சாலையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிந்து வடக்கு நோக்கி சிக்னல் அருகே அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் தனியார் ஆம்னி பேருந்து சென்றது.



அப்போது சிக்னல் அருகே பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் முன் சென்ற பேருந்து சாலையின் ஓரம் ஒதுங்கி கடை வாசலுக்கு சென்றது.



சாலையின் இடதுபுறம் இருந்த சிறு கடைகள் தடுப்புகள் தகர இரும்பு பெட்டிகள் உள்ளிட்டவற்றின் மீது மோதி கடை வாசலில் மோதி நின்றது. ஆம்னி பேருந்து அரசுப் பேருந்தின்மீது மோதியவுடன், அரசுப்பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு கடை மீது பேருந்து மோதாமல் தடுத்துவிட்டார்.

காலை நேரம் என்பதால் சாலையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், கடையில் இருந்த ஒரு நபர் மீது பேருந்து மோதியதில் அவர் லேசான காயம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...