கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

கோவை வேலாண்டிபாளையம் அருகே கார் மூலம் கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள், ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வேலாண்டி பாளையம் அருகே கார் மூலம் கேரளாவுக்கு கடத்த 600 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையிலிருந்து சரக்கு வாகனங்கள், கார்கள் மற்றும் ரயில் மூலமாக கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குடிமை பொருள் அதிகாரிகள் அவ்வப்போது தணிக்கையில் ஈடுபட்டு ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தும், கடத்தல் காரர்களை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் அடுத்த மல்லேஸ்வரி நகரில், குடிமை பொருள் வழங்கல் ஆய்வாளர் மேனகா, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மாருதி எஸ்டீம் கார் ஒன்றை தணிக்கை செய்தனர். அப்போது, காரின் பின்புறம் 12 மூட்டைகளில் 600 கிலோ எடை கொண்ட பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த மோகன் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி, கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குறைந்த விலையில் ரேஷன் அரிசிகளை கொள்முதல் செய்து, அதிக லாபத்துடன் வட மாநில தொழிலாளர்களுக்கும், மாவு அரைக்கும் மில்களுக்கும் அரிசி சப்ளை செய்து வந்தது உறுதியானது.

இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...