பாட்டில் தர்ரியா...இல்ல பணம் தர்ரியா? - கோவையில் டாஸ்மாக் பணியாளரிடம் அடாவடி செய்த ரவுடி கும்பல் கைது!

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடிக்க பணம் இல்லாததால், காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்துச் சென்ற 3 கொண்ட ரவுடி கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளரை மிரட்டி பணம் பறித்துச் சென்ற 3 பேர் கொண்ட ரவுடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளராகப் பணிபுரிவர் பிரகாஷ். இவர் பணியாற்றும் டாஸ்மாக் கடையில் உள்ள பாரில் மது அருந்த கார்த்திக் என்ற நபர் அடிக்கடி வருகை தருவார். கார்த்திக் தனியாக வராமல் பெரும்பாலும் தனது நண்பர் பட்டாளத்துடன் வந்து மது குடித்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கார்த்திக் தனது நண்பர்களான லிங்கா பூபதி மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோருடன் வந்து டாஸ்மாக் கடையின் காசாளர் பிரகாஷிடம் மதுபாட்டில் கேட்டுள்ளனர். அப்போது, பிரகாஷ், மது பாட்டில் தருவதற்கு பணம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு கார்த்திக், பணம் இல்லை என்றும் மதுபாட்டில் வேண்டுமென்றும் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு டாஸ்மாக் காசாளர், பணம் தராமல், மது பாட்டில் தர மாட்டேன் என மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கார்த்திக் மற்றும் அவனது நண்பர்கள் காசாளர் பிரகாஷை தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து, மது பருக பாட்டில் தர்ரியா? அல்லது பணம் தர்ரியா? என்று கத்தியை காட்டி மிரட்டி 200 ரூபாய் பணம் பறித்துக் கொண்டு, மூவரும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, காசாளர் பிரகாஷ் ரத்தினபுரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கார்த்திக் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில், மூன்று பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நடந்து வருவது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, போலீசாரின் மாஸ் ரைடில் கைது செய்யப்பட வேண்டிய ரவுடிகளின் பட்டியலில் இவர்கள் மூன்று பேரின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...