திருப்பூரில் பாஜக மாநில துணைத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரயில்வே போலீசாரை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜை மிரட்டி, அதனை வீடியோ பதிவாக டிவிட்டரிலும் வெளியிட்ட நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக மாநில துணைத் தலைவருக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை - கோவை சென்ற சதாப்தி ரயிலில் கடந்த 22ஆம் தேதி பாஜகவின் மாநில துணைத்தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அதே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சக பயணி ஒருவர் செய்தித்தாள்களில் வந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு பிரதமர் மோடியை விமர்சித்து வந்ததால் நாராயணன் திருப்பதி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் பொதுச் செயலாளருமான சாமுவேல்ராஜ், நாராயணன் திருப்பதி செயலை கண்டித்தபோது பாஜகவின் மாநில துணைத்தலைவர் மற்றும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் என அதிகாரத்தை பயன்படுத்தி ரயில்வே போலீசாரை வைத்து சாமுவேல்ராஜை மிரட்டியுள்ளார்.



அதனை வீடியோ பதிவாக டிவிட்டரிலும் வெளியிட்ட செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...