திருப்பூரில் பாஜக மாநில துணைத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரயில்வே போலீசாரை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜை மிரட்டி, அதனை வீடியோ பதிவாக டிவிட்டரிலும் வெளியிட்ட நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக மாநில துணைத் தலைவருக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை - கோவை சென்ற சதாப்தி ரயிலில் கடந்த 22ஆம் தேதி பாஜகவின் மாநில துணைத்தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அதே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சக பயணி ஒருவர் செய்தித்தாள்களில் வந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு பிரதமர் மோடியை விமர்சித்து வந்ததால் நாராயணன் திருப்பதி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் பொதுச் செயலாளருமான சாமுவேல்ராஜ், நாராயணன் திருப்பதி செயலை கண்டித்தபோது பாஜகவின் மாநில துணைத்தலைவர் மற்றும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் என அதிகாரத்தை பயன்படுத்தி ரயில்வே போலீசாரை வைத்து சாமுவேல்ராஜை மிரட்டியுள்ளார்.



அதனை வீடியோ பதிவாக டிவிட்டரிலும் வெளியிட்ட செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...