கோவை விசைத்தறி சங்க தலைவர் பழனிச்சாமி உயிரிழப்பு - துக்கம் தாளாமல் அவரது மனைவியும் உயிரிழந்த சோகம்!

கோவை சோமனூரை சேர்ந்த விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி, உடல் நலக்குறைவால் நேற்று நள்ளிரவு உயிரிழந்த நிலையில் இன்று காலை அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சோமனூரில் விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி இறந்த துக்கத்தில், அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(74). விசைத்தறி சங்கத் தலைவரான இவர், விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்களுக்கான இலவச மின்சாரம் உட்பட பலவற்றிற்கு பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்தவர்.

இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றி நள்ளிரவு உயிரிழந்தார்.

விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பழனிச்சாமியின் உயிரிழப்பு விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியிலும் விசைத்தறி சங்கங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவரது மனைவி கருப்பாத்தாள் இன்று காலை உயிரிழந்துள்ளார். கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி மறைவுக்கு விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி சங்கங்கள், விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...