கோவை விசைத்தறி சங்க தலைவர் பழனிச்சாமி உயிரிழப்பு - துக்கம் தாளாமல் அவரது மனைவியும் உயிரிழந்த சோகம்!

கோவை சோமனூரை சேர்ந்த விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி, உடல் நலக்குறைவால் நேற்று நள்ளிரவு உயிரிழந்த நிலையில் இன்று காலை அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சோமனூரில் விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி இறந்த துக்கத்தில், அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(74). விசைத்தறி சங்கத் தலைவரான இவர், விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்களுக்கான இலவச மின்சாரம் உட்பட பலவற்றிற்கு பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்தவர்.

இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றி நள்ளிரவு உயிரிழந்தார்.

விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பழனிச்சாமியின் உயிரிழப்பு விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியிலும் விசைத்தறி சங்கங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவரது மனைவி கருப்பாத்தாள் இன்று காலை உயிரிழந்துள்ளார். கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி மறைவுக்கு விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி சங்கங்கள், விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...