கோவை விசைத்தறி சங்க தலைவர் பழனிச்சாமி உயிரிழப்பு - துக்கம் தாளாமல் அவரது மனைவியும் உயிரிழந்த சோகம்!

கோவை சோமனூரை சேர்ந்த விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி, உடல் நலக்குறைவால் நேற்று நள்ளிரவு உயிரிழந்த நிலையில் இன்று காலை அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சோமனூரில் விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி இறந்த துக்கத்தில், அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(74). விசைத்தறி சங்கத் தலைவரான இவர், விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்களுக்கான இலவச மின்சாரம் உட்பட பலவற்றிற்கு பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்தவர்.

இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றி நள்ளிரவு உயிரிழந்தார்.

விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பழனிச்சாமியின் உயிரிழப்பு விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியிலும் விசைத்தறி சங்கங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவரது மனைவி கருப்பாத்தாள் இன்று காலை உயிரிழந்துள்ளார். கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி மறைவுக்கு விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி சங்கங்கள், விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...