நீலகிரியில் வனவிலங்குகளை வேட்டையாடிய வடமாநில கும்பல் கைது - புலித்தோல் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் கம்பளி விற்பனை செய்வதாகக் கூறி வனப்பகுதியில் சிறுத்தை மற்றும் புலியை வேட்டையாடிய வட மாநில பவாரிய கும்பலை வனத்துறையினர் கைது செய்து, புலி தோலை பறிமுதல் செய்தனர்.


நீலகிரி: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அரசூர் கிராமத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த சிலர் சந்தேகப்படும்படி நடமாட்டம் இருந்ததால், சத்தியமங்கலம் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் புலித்தோல், புலிநகம், புலி எலும்புகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.



தொடர் விசாரணையில் பஞ்சாப்பை சேர்ந்த ரத்னா (வயது40), மங்கல் (வயது28), கிருஷ்ணன் (வயது59), ராஜஸ்தானை சேர்ந்த ராம் சந்தர் (வயது50) எனத் தெரிய வந்ததை அடுத்து அவர்களை கைதுசெய்து புலி தோல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.



விசாரணையில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி அருகே அடர்ந்த வனப்பகுதியில் வட மாநிலத்தை சார்ந்த பவாரியா ஆதிவாசி கும்பல் கூடாரம் அமைத்து தாங்கி, டிராப் எனப்படும் சுறுக்கை வைத்து சிறுத்தை மற்றும் புலியை பிடித்ததாகவும், பின்னர் அவற்றை அடித்துக் கொன்று இறைச்சியை சமைத்து சாப்பிட்டதுடன் தோலை கடத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள், பிடிபட்ட நான்கு பேரையும் புலியை கொன்ற இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



அதன்பேரில் தற்போது 2 வடமாநில பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, 4 பவாரியா கும்பல்கள் நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் நுழைந்துள்ளதாகவும் அதில் ஒரு கும்பல் மட்டுமே சிக்கிய நிலையில் மேலும் 3 குழுக்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்து விசாரித்து, அவர்களைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...