பல்லடம் அருகே மருத்துவமனை, மருந்தகத்திற்கு சீல் - மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போலி மருத்துவமனை மற்றும் மருந்து கடைக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் கொடுவாய் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.



இதனையடுத்து, இன்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான அதிகாரிகள் கொடுவாய் பகுதியில் திருப்பூர் - தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வணிக வளாகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வில் சுகம் மருத்துவமனை மற்றும் சுகம் மருந்து கடை ஆகியவை அரசு விதிமுறைகளின்படி அனுமதி ஏதும் பெறாமல் இயங்கி வந்தது ஆய்வில் தெரிய வந்தது.



இதையடுத்து, சுகம் மருத்துவமனை மற்றும் மருந்துக் கடையின் ஷட்டரை பூட்டி, பூட்டு போட்டு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...