பல்லடம் அருகே மருத்துவமனை, மருந்தகத்திற்கு சீல் - மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போலி மருத்துவமனை மற்றும் மருந்து கடைக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் கொடுவாய் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.



இதனையடுத்து, இன்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான அதிகாரிகள் கொடுவாய் பகுதியில் திருப்பூர் - தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வணிக வளாகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வில் சுகம் மருத்துவமனை மற்றும் சுகம் மருந்து கடை ஆகியவை அரசு விதிமுறைகளின்படி அனுமதி ஏதும் பெறாமல் இயங்கி வந்தது ஆய்வில் தெரிய வந்தது.



இதையடுத்து, சுகம் மருத்துவமனை மற்றும் மருந்துக் கடையின் ஷட்டரை பூட்டி, பூட்டு போட்டு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...