உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்

உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைச் சட்டம் 2016 முறையாக அமலாக்கம் செய்ய வேண்டும், மாநில அரசு அறிவித்த 1500 ரூபாயும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 2000ரூபாயும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையாளர்களுக்கான சங்கம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் மாலினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைச் சட்டம் 2016 முறையாக அமலாக்கம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு அறிவித்த 1500 ரூபாயும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 2000 ரூபாயும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாற்று திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.



100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு மணி நேரம் மற்றும் வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க் கூட்டம் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் வேலை தெரிந்தவர்களுக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்க வேண்டும்.



காவல் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்கள் மீது மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேஷ், சிஐடியு ஜெகதீஷ், கனகராஜ், ரங்கநாதன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...