நீலகிரி அகழியில் தவறி விழுந்த தாய், குட்டி யானைகள் - பத்திரமாக மீட்ட வனத்துறை!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், போஸ்பாரா பகுதியில் உள்ள அகழியில் தாய் யானை மற்றும் குட்டி யானையை தவறி விழுந்தன. யானைகள் மேலே ஏறி வர வழி ஏற்படுத்தி வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த காப்பகத்தில் தற்போது வறட்சி காலம் தொடங்கியிருக்கும் நிலையில் காட்டு யானைகள் குட்டிகளுடன் இடம்பெயர்ந்து செல்ல தொடங்கியுள்ளன.



இந்நிலையில், குட்டியுடன் நான்கு யானைகள் இன்று காலை முதுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட போஸ்பாரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கே வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த அகழியில் இறங்கின.



ஆனால் அகழியின் இரு புறங்களும் உயரமாக இருந்த காரணத்தினால் குட்டி யானையால் மேலே ஏறி வர முடியவில்லை. அதனை அடுத்து தாய் யானையுடன் சேர்ந்து சக யானைகள் குட்டியை அகழியில் இருந்து மேலே அழைத்து வர போராடின. முடியாத காரணத்தினால் யானை கூட்டம் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், யானையை மேலே ஏறி வர வழி ஏற்படுத்தினர். அந்த வழியாக தாய் யானை உள்ளிட்ட பெரிய யானைகள் ஏறிய நிலையில், குட்டி யானையை வனத்துறையினர் மேலே ஏற்றிவிட்டனர். இதனையடுத்து குட்டி யானை தாய் யானையுடன் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...