நீலகிரி அகழியில் தவறி விழுந்த தாய், குட்டி யானைகள் - பத்திரமாக மீட்ட வனத்துறை!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், போஸ்பாரா பகுதியில் உள்ள அகழியில் தாய் யானை மற்றும் குட்டி யானையை தவறி விழுந்தன. யானைகள் மேலே ஏறி வர வழி ஏற்படுத்தி வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த காப்பகத்தில் தற்போது வறட்சி காலம் தொடங்கியிருக்கும் நிலையில் காட்டு யானைகள் குட்டிகளுடன் இடம்பெயர்ந்து செல்ல தொடங்கியுள்ளன.



இந்நிலையில், குட்டியுடன் நான்கு யானைகள் இன்று காலை முதுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட போஸ்பாரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கே வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த அகழியில் இறங்கின.



ஆனால் அகழியின் இரு புறங்களும் உயரமாக இருந்த காரணத்தினால் குட்டி யானையால் மேலே ஏறி வர முடியவில்லை. அதனை அடுத்து தாய் யானையுடன் சேர்ந்து சக யானைகள் குட்டியை அகழியில் இருந்து மேலே அழைத்து வர போராடின. முடியாத காரணத்தினால் யானை கூட்டம் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், யானையை மேலே ஏறி வர வழி ஏற்படுத்தினர். அந்த வழியாக தாய் யானை உள்ளிட்ட பெரிய யானைகள் ஏறிய நிலையில், குட்டி யானையை வனத்துறையினர் மேலே ஏற்றிவிட்டனர். இதனையடுத்து குட்டி யானை தாய் யானையுடன் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...