கோவையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகம் - மக்கள் விடுதலை முன்னணி புகார்!

கோவை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள் விடுதலை முன்னணியினர், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


கோவை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், கோவை மாவட்டத்தில் கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கு மண்டல அமைப்பாளர் ராஜன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



தமிழ்நாட்டில் இளைஞர்கள், மாணவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.



மேலும், கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசு அறிவித்துள்ள நேரத்தை தாண்டியும் கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், இதுபோன்று மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜன் கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...