கோவையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகம் - மக்கள் விடுதலை முன்னணி புகார்!

கோவை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள் விடுதலை முன்னணியினர், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


கோவை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், கோவை மாவட்டத்தில் கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கு மண்டல அமைப்பாளர் ராஜன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



தமிழ்நாட்டில் இளைஞர்கள், மாணவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.



மேலும், கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசு அறிவித்துள்ள நேரத்தை தாண்டியும் கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், இதுபோன்று மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜன் கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...