உடுமலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு சத்துணவு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி ஆசிரம உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11ஆவது வாரமாக ரொட்டி, பால், முட்டை, பேரிச்சம்பழம், எள் உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சத்துணவு வழங்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11ஆவது வாரமாக சத்துணவு வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி, திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று 11ஆவது வாரம் காந்தி ஆசிரமம் உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.



இதில் ரொட்டி, பால், முட்டை, பேரிச்சம்பழம், எள் உருண்டை, இலந்தை வடை, கடலைமிட்டாய், வாழைப்பழம், அவித்த நிலக்கடலை, பாசிப்பயிர், பிஸ்கட், பொறி உருண்டை, இஞ்சி மிட்டாய் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தது.



இந்நிகழ்ச்சியில் உடுமலை நகர விஜய் ரசிகர் மக்கள் இயக்கம் நகர தலைவர் ராமன், நகர நிர்வாகிகள் அப்துல்லா காஜா, பிரபு, செந்தில், சந்திரன், நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...