உடுமலை அருகே மஹா சிவராத்திரி திருச்சப்பர ஊர்வலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற திருசப்பர ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நடைபெற்ற திருசப்பர சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இந்தாண்டு மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முன்னோர்கள் அறிவுரையின் பேரில் பூலாங்கிணர் கிராமத்தில், பாரம்பரிய முறையில், திருச்சப்பரம் தயார் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து, பூலாங்கிணர், ராகல்பாவி, ஆர்.வேலூர் கிருஷ்ணாபுரம், வாளவாடி வழியாகத் திருச்சப்பர ஊர்வலம் நடைபெற்றது. இதில், கிராம மக்கள், வேளாண் வளம் செழிக்க, தானியங்கள், பழ வகைகள், விவசாய விளை பொருட்கள் வீசியும், மண்டக படி அமைத்துச் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.



இதேபோல், வாளவாடியில் நடைபெற்ற திருசப்பர சிறப்பு பூஜையில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் திருமூர்த்திமலைக்கு திருச்சப்பரம் சென்ற நிலையில் சிறப்புப் பூஜை முதல் கால யாகப் பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...