ஊட்டி அங்கன்வாடி மையங்களில் சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு!

அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஊட்டி வட்டாரத்தில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் குறித்தும், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: உதகையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகை விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் அத்துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு கலந்து கொண்டார்.



இதில் பள்ளிக்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் காலை உணவுத்திட்டம் குறித்தும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், புதுமைப்பெண் திட்டம் செயல்பாடுகள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள குழந்தை இல்லங்கள் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்து, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்-2012, குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, ஊட்டி வட்டாரத்தில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் குறித்தும், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலும் ஆய்வு

மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அம்ரித், சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோல்டிசாராள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...