ஊட்டி அங்கன்வாடி மையங்களில் சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு!

அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஊட்டி வட்டாரத்தில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் குறித்தும், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: உதகையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகை விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் அத்துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு கலந்து கொண்டார்.



இதில் பள்ளிக்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் காலை உணவுத்திட்டம் குறித்தும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், புதுமைப்பெண் திட்டம் செயல்பாடுகள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள குழந்தை இல்லங்கள் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்து, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்-2012, குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, ஊட்டி வட்டாரத்தில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் குறித்தும், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலும் ஆய்வு

மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அம்ரித், சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோல்டிசாராள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...