உடுமலையில் இருந்து ஊட்டிக்கு அரசுப்பேருந்து சேவை - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, உடுமலையில் இருந்து திருப்பூருக்கு செல்ல அதிக பேருந்துகள் இயக்க வேண்டும், இரவு நேரங்களிலும், குறிப்பிட்ட இடை வெளியில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



அவ்வகையில், உடுமலையில் இருந்து திருப்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு இயக்கப்பட்டுவந்த அரசுப் பேருந்து சேவையும் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், உடுமலை திருப்பூர் வழித்தடத்தில், அதிக கிராமங்கள் அமைந்துள்ள நிலையில், அனைத்து நிறுத்தங்களிலும் விரைவு பேருந்துகள் நின்று செல்ல வேண்டியுள்ளது. அதேபோல், போதி அளவு பேருந்துகளும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை.

உடுமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து காலை, 9:40 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர், அவிநாசி வழியாக ஊட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், முன்னறிவிப்பின்றி பேருந்து சேவை நிறுத்தப்படுவதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, திருப்பூருக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...