உடுமலையில் இருந்து ஊட்டிக்கு அரசுப்பேருந்து சேவை - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, உடுமலையில் இருந்து திருப்பூருக்கு செல்ல அதிக பேருந்துகள் இயக்க வேண்டும், இரவு நேரங்களிலும், குறிப்பிட்ட இடை வெளியில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



அவ்வகையில், உடுமலையில் இருந்து திருப்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு இயக்கப்பட்டுவந்த அரசுப் பேருந்து சேவையும் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், உடுமலை திருப்பூர் வழித்தடத்தில், அதிக கிராமங்கள் அமைந்துள்ள நிலையில், அனைத்து நிறுத்தங்களிலும் விரைவு பேருந்துகள் நின்று செல்ல வேண்டியுள்ளது. அதேபோல், போதி அளவு பேருந்துகளும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை.

உடுமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து காலை, 9:40 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர், அவிநாசி வழியாக ஊட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், முன்னறிவிப்பின்றி பேருந்து சேவை நிறுத்தப்படுவதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, திருப்பூருக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...