பேருந்தில் தவறாக ரூ.500 அபராதம் வசூலித்த வழக்கு - ஊட்டி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் தீர்ப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு பேருந்தில் பயணியிடம் டிக்கெட் வாங்கவில்லை என்று கூறி 500 ரூபாய் தவறுதலாக அபராதம் வசூலிக்கபட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பயணி சேகர் என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.



நீலகிரி: உதகை பர்ன்ஹில் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சேகர் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி கோவையிலிருந்து அரசு பேருந்தில் உதகைக்கு வந்தார். சேரிங்கிராஸ் பகுதியில் அந்த பேருந்தில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், பயணிகளிடம் டிக்கெட் வாங்கி சோதனை செய்தார். அப்போது, சேகர் தனது டிக்கெட்டை பையில் தேடி எடுக்க தாமதம் ஆகியுள்ளது.



இதனையடுத்து, பயணியான சேகர் டிக்கெட்வாங்கவில்லை என்று கூறி டிக்கெட் பரிசோதகர் 500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சேகர், உதகையில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இதனை விசாரித்த ஆணையம், பாதிக்கப்பட்ட சேகரிடம் வசூலிக்கபட்ட 500 ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற செலவாக 3 ஆயிரத்தையும் மன உளைச்சல் அடைந்ததால் 25 ஆயிரம் ரூபாயையும் நஷ்ட ஈடாகவும் வழங்குமாறு நீலகிரி மாவட்ட போக்குவரத்து கழக மேலாளருக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...