பேருந்தில் தவறாக ரூ.500 அபராதம் வசூலித்த வழக்கு - ஊட்டி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் தீர்ப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு பேருந்தில் பயணியிடம் டிக்கெட் வாங்கவில்லை என்று கூறி 500 ரூபாய் தவறுதலாக அபராதம் வசூலிக்கபட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பயணி சேகர் என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.



நீலகிரி: உதகை பர்ன்ஹில் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சேகர் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி கோவையிலிருந்து அரசு பேருந்தில் உதகைக்கு வந்தார். சேரிங்கிராஸ் பகுதியில் அந்த பேருந்தில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், பயணிகளிடம் டிக்கெட் வாங்கி சோதனை செய்தார். அப்போது, சேகர் தனது டிக்கெட்டை பையில் தேடி எடுக்க தாமதம் ஆகியுள்ளது.



இதனையடுத்து, பயணியான சேகர் டிக்கெட்வாங்கவில்லை என்று கூறி டிக்கெட் பரிசோதகர் 500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சேகர், உதகையில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இதனை விசாரித்த ஆணையம், பாதிக்கப்பட்ட சேகரிடம் வசூலிக்கபட்ட 500 ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற செலவாக 3 ஆயிரத்தையும் மன உளைச்சல் அடைந்ததால் 25 ஆயிரம் ரூபாயையும் நஷ்ட ஈடாகவும் வழங்குமாறு நீலகிரி மாவட்ட போக்குவரத்து கழக மேலாளருக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...