பிரபாகரன் விவகாரம் - பழ.நெடுமாறனிடம் விசாரணை நடத்த டாக்டர். கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ள விவகாரம் குறித்து பழ.நெடுமாறனிடம் உளவுத்துறை மூலம் விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.


இலங்கை இறுதிப்போரின்போது மரணமடைந்ததாகக் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், நலமாக இருப்பதாகவும், விரைவில் மக்கள் முன்தோன்றுவார் என்றும் அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



இலங்கையில், 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி போரில், முள்ளிவாய்க்காலில் மட்டுமே, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மூன்று லட்சம் பேர் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்த போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப் படவில்லை.

இந்நிலையில், பழ.நெடுமாறன், 'பிரபாகரன் உடல் நலத்துடன் இருக்கிறார்; அவர் விரைவில் வெளிப்படுவார்' என அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றால் தமிழர்களுக்கு மிக மகிழ்ச்சிதான். அதே சமயத்தில் ஒரு பரபரப்பை உருவாக்க அல்லது வேறு அரசியல் உள்நோக்கத்துக்காக பழ.நெடுமாறன் இப்படி தெரிவித்து இருந்தால், அது மிகப்பெரிய ஏமாற்றமாகிவிடும்.

பழ. நெடுமாறனிடம் மத்திய, மாநில அரசுகள் உளவுத்துறையைக் கொண்டு ரகசிய விசாரணையை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வந்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...