தாராபுரம் குப்பைக்கிடங்கில் பயங்கர தீவிபத்து - 5 கிராம மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மொய்யணம்படுகை, குப்பிச்சிபாளையம், சீராம்பாளையம், வீராட்சி மங்கலம், துளசி மேட்டுகளம், சுங்கம், உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் 2000 குடும்பங்கள் மூச்சுத் திணறலால் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் 10 ஏக்கர் பரப்பில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் என தீப்பற்றி மளமளவென பரவியது.



சிறிது நேரத்தில் சுற்றுப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது.



இதனால், மொய்யணம்படுகை, குப்பிச்சிபாளையம், சீராம்பாளையம், வீராட்சி மங்கலம், துளசி மேட்டுகளம், சுங்கம், உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் 2000 குடும்பங்கள் மூச்சுத் திணறலால் அவதிக்குள்ளாகினர்.

தீவிபத்து குறித்து சுங்கம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.



அதன்பேரில் அங்கு வந்த நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கப் போராடினர்.



ஆனாலும், தீ கட்டுக்கடங்காமல் பரவிவரும் நிலையில், தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்து விட்டதால் நகராட்சி குடிநீர் வாகனத்தின் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு அதை தீயணைப்பு வாகனத்திற்கு மாற்றி மீண்டும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.



இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.



மேலும், அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்களுக்கு தீ பரவாமல் இருக்க மின் செயற்பொறியாளர் பாலன் தலைமையிலான மின் அலுவலர்கள் நஞ்சியம்பாளையம் மற்றும் சுங்கம் பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், ஐந்து கிராமங்களுக்கு மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்து குறித்து விவசாயி சிவகுமார் கூறுகையில்,



தாராபுரம் நகராட்சி குப்பை கிடங்கு குடியிருப்புகள் மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் கடந்த 30 வருடங்களாக இருந்து வருகிறது. இந்த குப்பை கிடங்கில் ஆண்டிற்கு இருமுறை குப்பையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு பற்றி எரியும் தீ தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு எரிவது மட்டும் அல்லாமல், அணைந்த பிறகும் 3 நாட்களுக்கு புகை காற்றில் பரவும்.

இதனால், ஆடு மாடு, கோழி போன்ற உயிரினங்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதோடு, சில கோழிகள் இறந்தும் விடுகிறது. இந்தப் புகை விவசாய நிலங்களில் படுவதால் விவசாய காய்கறிகள், பயிர் வகைகள் முற்றிலும் கருகி விடுகின்றன. ஆடு மாடுகள் சினை பிடிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது . எனவே சுங்கம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும், என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...