வால்பாறை அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்

வால்பாறை அருகேயுள்ள தாய்முடி எஸ்டேட் என்.சி பிரிவில் குடியிருந்து வரும் பழனிசாமி என்பவர், இன்று தேயிலை தோட்டத்தில் வேலை செய்து விட்டு, வீட்டிற்குத் திரும்பும் போது, காட்டெருமை அவரை தாக்கியதில் தலை மற்றும் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது.


கோவை: வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளியை காட்டெருமை தாக்கியதில் காயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் என் சி பிரிவில் குடியிருந்து வருபவர் பழனிசாமி(54).

இவர் இன்று தேயிலைத் தோட்டத்தில் வேலை முடித்து விட்டு, வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக வந்த காட்டெருமைகள், பழனிசாமியை தாக்கியுள்ளது. இதில் அவருக்கு தலை மற்றும் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது.



அருகிலிருந்த சக தொழிலாளர்கள் பழனிசாமியை மீட்டு எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.



பின்னர் மேல்சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...