கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் பணிகள் தீவிரம்!

கோவைக்கு வரும் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவுள்ள நிலையில் கோவை - அவிநாசி இடையேயான சாலையில் உள்ள மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி விட்டு வர்ணம் பூசும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை - அவினாசி சாலையில் உள்ள மேம்பாலங்களின் தூண்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை - அவினாசி இடையேயான சாலையானது மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே காணப்படும். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை 6 வழி சாலையாக மாற்றப்பட்டது.

இருந்த போதும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இதனிடையே 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. தற்போது பாலத்திற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோல்டு வின்சிலிருந்து விமான நிலையம் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்ற வரும் நிலையில், சுவர் விளம்பரங்களை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல் கட்டமாக காந்திபுரத்தில் உள்ள உயர்மட்ட மேம்பால தூண்கள் மற்றும் சாலையோரங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

இதன் அடுத்தபடியாக அவினாசி மேம்பால தூண்களிலும் சுவரொட்டிகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் கோவை வர உள்ளார்.

இதன் காரணமாக தூண்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து வருகின்றனர். சாலையின் நடுவே உள்ள தடுப்புகள், அவினாசி மேம்பாலம் ரவுண்டானா ஆகிய இடங்களில் வண்ணம் பூசப்பட்டு கோவை மாவட்டமே புதுப்பொலிவு பெற்று வருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...