உடுமலை அரசுப்பள்ளியில் தமிழ் கண்காட்சி - பார்வையாளர்கள் உற்சாகம்!

உடுமலை அருகே சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் கண்காட்சியில் வைக்கப்பட்ட படைப்புகளை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கைத்திறன்களையும், கலைநயத்தையும் தமிழுடன் சேர்த்து வெளிப்படுத்தும் வகையிலான தமிழ் கண்காட்சி நடந்தது.



பள்ளித் தலைமை ஆசிரியர் கோப்பெருந்தேவி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர்கள் அனைவரும், வகுப்பு மாணவர்களை ஊக்குவித்து, தமிழ் பழமையை போற்றும் புதிய படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.



சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், மூவேந்தர்களின் வீரம், கால்நடை வளர்ப்பு, விவசாயம், பாரம்பரிய உணவு தானியங்கள், வீரப்பெண்கள், கோவில்களின் சிறப்பு, வரலாற்று சிறப்புமிக்க கட்டமைப்புகள், கவிஞர்கள், புலமை, பாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை சார்ட்களாகவும், படைப்புகளாகவும் புதுவிதமாக காட்சிப்படுத்தினர்.



இயல், இசை, நாடகத்தமிழை கண்முன் விருந்தளிந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்தக் கண்காட்சியை, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் உடுமலை தமிழிசை சங்கத்தினர், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...