கோவை மாவட்ட அரசுப் பள்ளிகளில் குறும்படம் திரையிடல் - மாணவர்களிடம் ரூ.10 வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு

கோவை மாவட்டத்தில் உள்ள 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நாளை நமதே எனும் குறும்படம் திரையிடலுக்காக மாணவர்களிடம் தலா 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. கல்விக் கட்டணமில்லாமல் இலவச புத்தகங்களோடு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வரும் நிலையில், ஒரு குறும்படத்திற்கு பணம் வசூலிப்பது வேதனை அளிப்பதாக கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் அறிக்கை.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 11 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டு நாளைநமதே என்ற குறும்படம் திரையிடப்பட்டது. ஆடிட்டேரியம் வசதி இல்லாத பள்ளிகளில் திறந்த வெளி ஆடிட்டேரியத்தில் அதிக வெளிச்சமான ஓபன் ஸ்டேடியத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இதற்கு, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திறந்தவெளியில் திரையிடப்பட்ட இந்தப் படத்தில் அதிக வெளிச்சம் காரணமாக உருவமே சரியாக தெரியவில்லை. படம் துவக்கத்திலேயே திரையில் தேசிய கொடியை‌ காண்பித்துக் தேசிய கீதம் திரையில் ஒலிக்கப்பட்டது.

மாணவர்கள் உட்கார்ந்த நிலையில் கை தட்டிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் அங்கும் இங்குமாக நடந்த வண்ணம் இருந்தனர். "நாளைநமதே" குறும்படம் ஒரு மணி நேர படமாக வடிவமைக்கப்பட்டது.

இதில். ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போலவும், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றது போலவும், பெண் குழந்தைஎன்ற உடன் கணவன் கை விட்டது போலவும்‌ அந்த குழந்தைகளைப் பெற்ற தாய் சிறிது காலத்தில் இறந்து விட்டதால், அந்த குழந்தையை ஒரு ஆசிரியை காப்பகத்தில் வைத்து வளர்த்து பெரிய அதிகாரியாக உயர்த்தியதாக கதை அமைந்தது.

கல்வி தொலைக்காட்சி, இல்லம் தோறும் கல்வி என அரசின் திட்டங்கள் உள்ளபோது வெளிச்சமான இடத்தில், முகமே சரியாக தெரியாத படத்துக்காக அரசு பள்ளி மாணவர்களிடம் தலா 10 ரூபாய் வசூல் என்றால் இது அரசு பள்ளியா?? இல்லை தனியார் பள்ளியா?? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கல்விக் கட்டணம் இல்லை, இலவச புத்தகங்கள், நலத்திட்டஉதவிகள் என அரசு வழங்கும் நிலையில், ஒரு குறும்படம் காட்ட மாணவருக்கு 10ரூபாய் வசூலிப்பது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரும் கண்டுகொள்ளவில்லை எனகலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் தமது அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...