கோவை மாவட்ட அரசுப் பள்ளிகளில் குறும்படம் திரையிடல் - மாணவர்களிடம் ரூ.10 வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு

கோவை மாவட்டத்தில் உள்ள 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நாளை நமதே எனும் குறும்படம் திரையிடலுக்காக மாணவர்களிடம் தலா 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. கல்விக் கட்டணமில்லாமல் இலவச புத்தகங்களோடு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வரும் நிலையில், ஒரு குறும்படத்திற்கு பணம் வசூலிப்பது வேதனை அளிப்பதாக கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் அறிக்கை.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 11 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டு நாளைநமதே என்ற குறும்படம் திரையிடப்பட்டது. ஆடிட்டேரியம் வசதி இல்லாத பள்ளிகளில் திறந்த வெளி ஆடிட்டேரியத்தில் அதிக வெளிச்சமான ஓபன் ஸ்டேடியத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இதற்கு, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திறந்தவெளியில் திரையிடப்பட்ட இந்தப் படத்தில் அதிக வெளிச்சம் காரணமாக உருவமே சரியாக தெரியவில்லை. படம் துவக்கத்திலேயே திரையில் தேசிய கொடியை‌ காண்பித்துக் தேசிய கீதம் திரையில் ஒலிக்கப்பட்டது.

மாணவர்கள் உட்கார்ந்த நிலையில் கை தட்டிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் அங்கும் இங்குமாக நடந்த வண்ணம் இருந்தனர். "நாளைநமதே" குறும்படம் ஒரு மணி நேர படமாக வடிவமைக்கப்பட்டது.

இதில். ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போலவும், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றது போலவும், பெண் குழந்தைஎன்ற உடன் கணவன் கை விட்டது போலவும்‌ அந்த குழந்தைகளைப் பெற்ற தாய் சிறிது காலத்தில் இறந்து விட்டதால், அந்த குழந்தையை ஒரு ஆசிரியை காப்பகத்தில் வைத்து வளர்த்து பெரிய அதிகாரியாக உயர்த்தியதாக கதை அமைந்தது.

கல்வி தொலைக்காட்சி, இல்லம் தோறும் கல்வி என அரசின் திட்டங்கள் உள்ளபோது வெளிச்சமான இடத்தில், முகமே சரியாக தெரியாத படத்துக்காக அரசு பள்ளி மாணவர்களிடம் தலா 10 ரூபாய் வசூல் என்றால் இது அரசு பள்ளியா?? இல்லை தனியார் பள்ளியா?? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கல்விக் கட்டணம் இல்லை, இலவச புத்தகங்கள், நலத்திட்டஉதவிகள் என அரசு வழங்கும் நிலையில், ஒரு குறும்படம் காட்ட மாணவருக்கு 10ரூபாய் வசூலிப்பது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரும் கண்டுகொள்ளவில்லை எனகலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் தமது அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...