உடுமலை அருகே குளங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலையில் நீர்நிலைகளை பாழாக்கும் விதமாக குளங்களில் குப்பைகள் கொட்டுகின்றனர், சிலர் குப்பைகளை குளங்களின் ஓரங்களில் கொட்டி எரிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.


திருப்பூர்: உடுமலையில் நீர்நிலைகளின் அருகே குப்பைகளை கொட்டி தீ வைக்கப்படும் சம்பவங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, சமீப காலங்களாக நீர் நிலைகள் பாதுகாப்பில் காட்டப்படும் அலட்சியம் வருங்காலத்தில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அம்சமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

பல பகுதிகளில் உள்ள மழைநீர் ஓடைகள் சாக்கடைக் கால்வாய்களாக மாற்றப்பட்டு விட்டன. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் கலக்கப்படுவதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.

உடுமலை நகருக்கு அருகில் ஏழு குளப்பாசனக் குளங்களில் ஒன்றான ஒட்டு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் உபரிநீர் தங்கம்மாள் ஓடை வழியாக வழிந்து சென்று உப்பாறு ஓடையில் கலந்து உப்பாறு அணையை அடைகிறது.

இந்த குளத்தை நம்பி பல விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்துள்ளனர். இந்த குளத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது.

அதிலும் வெட்டி அகற்றப்பட்ட தென்னை மரங்கள், வாழை மரங்கள் போன்ற விவசாயக் கழிவுகளை டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் வந்து ஒட்டுக்குளத்துக்குள் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.

மேலும் அவ்வப்போது இந்த கழிவுகளை தீ வைத்துக் கொளுத்தி விடுகிறார்கள். இதனால் குளத்து நீர் மாசடைவதுடன் காற்று மாசு ஏற்படவும் காரணமாகிறது.

இதுதவிர பல ஓடைகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கோழி கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டி நீர் நிலைகளைப் பாழாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. நீர் நிலைகளைப் பாழாக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நீர்நிலைகள் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல மீன்கள், தவளைகள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து விதமான உயிர்களுக்கும் பொதுவானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...