பொள்ளாச்சியில் தனியார் பள்ளியில் அரசு இடஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் குளறுபடி - பெற்றோர் முற்றுகை!

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 25 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் கட்டணம் செலுத்த சொல்லி பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்.



கோவை: கோவைமாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளியில் அரசு இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி - கோவை சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் தமிழக அரசின் RTE ( Right to education) எனப்படும் 25 சதவிகித இலவச கல்வி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 15 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது ஓராண்டு கழித்து தேர்வு செய்யப்பட்ட 15 குழந்தைகளில் ஐந்து குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறி பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்தியுள்ளது.



இல்லை என்றால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பள்ளி நிர்வாகம் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் இதுவரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு ஒப்புதல் கடிதமும் வரவில்லை என்று பெற்றோர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது.



இதையடுத்து பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டபோது இது சம்பந்தமாக ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாகவும் கண்டுகொள்ளாமல் இருந்தது அவர்கள் தவறு தான் என்று காரணம் சொன்னதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இப்படி பள்ளி நிர்வாகமும் மாவட்ட கல்வி அதிகாரிகளும் காரணம் கூறி எங்கள் பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறி ஆக்கிவிட்டதாக வேதனை தெரிவித்ததோடு பிள்ளைகளின் படிப்பு தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...