கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் கவிதை போட்டி: வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு ரொக்கப் பரிசுகள்!

கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


கோவை: கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவையில் உள்ள அருவி வாசகர் வட்டம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.02.2023) மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான தமிழ் கவிதைப் போட்டி நடைபெற்றது. இந்த கவிதை போட்டியில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில், சி.எம்.எஸ் கல்வியியல் கல்லூரி மாணவர் பிரகாஷ்ராஜ்-க்கு முதல் பரிசாக ரூ.2,500 வழங்கப்பட்டது. அதேபோல் தென்காசி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவி கிருஷ்ணம்மாளுக்கு 2ஆம் பரிசாக ரூ.1,500 வழங்கப்பட்டது.

மேலும், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ரிதன்யா சாருமதிக்கு மூன்றாம் பரிசாக ரூ.500, அதே பி.எஸ்.ஜி கல்லூரியை சேர்ந்த சுந்தருக்கு 4ஆவது பரிசாக ரூ.250 வழங்கப்பட்டது.



தொடர்ந்து இந்த கவிதை போட்டியில் மேடையில் தங்கள் கவிதைகளை வாசித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞர் முனைவர் மு. நாகராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், சமகால சமூக-அரசியல் பிரச்சினைகளை வாசகர்களுக்கு தெளிவாகப் புரிந்துகொள்ளும் கவிதைகள் மட்டுமே தலைமுறைகளை கடந்து செல்லும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அருவி வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் அனைவரையும் வரவேற்றார், இந்த விழாவை சக்தி ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...