திருடப்பட்ட ரூ.12.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த நீலகிரி எஸ்.பி.!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் திருடப்பட்ட 12.50 லட்சம் மதிப்பிலான 152 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் இன்று வழங்கப்பட்டன. ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றபட்ட 3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கபட்டவரிடம் எஸ்பி பிரபாகர் வழங்கினார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் சமூக வலை தள குற்றங்கள் தொடர்பாக 679 புகார்கள் வந்தன. அவற்றில் 67 புகார்களில் வழக்குகள் பதிவு செய்தூள்ள மாவட்ட சைபர் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.



அதில், 181 செல்போன்கள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடித்து செல்லப்பட்டது. அவற்றில் 152 செல்போன்களை மீட்டுள்ள நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பளர் முன்னிலையில் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், நீலகிரி மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மூலமாக இதுவரை 6 கோடியே 16 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. அதில், 10 லட்சம் மீட்கபட்டு பாதிக்கபட்டவர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. 4 கோடியே 40 லட்சம் ரூபாயை வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.



மேலும், தற்போது 12.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.



52 செல்போன்கள் மீட்கும் பணி தொடர்கிறது, ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றபட்ட 3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கபட்டவரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...