முதலில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்..!' - காவல் ஆணையரிடம் கோவை காவலர்கள் குடும்பத்தினர்!

கோவை உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பில் விஷ பூச்சிகள் நடமாட்டம் காரணமாக, அங்கு மண்டி கிடக்கும் புதர்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி காவலர்கள் குடும்பத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் மண்டியுள்ள புதர்களை அகற்றகோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உப்பிலிபாளையம் பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 400 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக தூய்மை பணிகளை மேற்கொள்ளாததால் புதர் மண்டி கிடப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால், குழந்தைகளுடன் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கூறும் காவலர்களின் குடும்பத்தினர் விஷபூச்சிகளின் காரணமாக பெரும்பாலான காவலர்கள் குடியிருப்பை காலி செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

உதவி ஆணையர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்களின் குடும்பத்தினர் என சுமார் 40 குடும்பங்கள் வசித்து வரும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற வலியுறுத்தி காவலர்களின் குடும்பத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

மேலும் விரைவாக குடியிருப்பு வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...