முதலில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்..!' - காவல் ஆணையரிடம் கோவை காவலர்கள் குடும்பத்தினர்!

கோவை உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பில் விஷ பூச்சிகள் நடமாட்டம் காரணமாக, அங்கு மண்டி கிடக்கும் புதர்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி காவலர்கள் குடும்பத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் மண்டியுள்ள புதர்களை அகற்றகோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உப்பிலிபாளையம் பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 400 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக தூய்மை பணிகளை மேற்கொள்ளாததால் புதர் மண்டி கிடப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால், குழந்தைகளுடன் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கூறும் காவலர்களின் குடும்பத்தினர் விஷபூச்சிகளின் காரணமாக பெரும்பாலான காவலர்கள் குடியிருப்பை காலி செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

உதவி ஆணையர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்களின் குடும்பத்தினர் என சுமார் 40 குடும்பங்கள் வசித்து வரும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற வலியுறுத்தி காவலர்களின் குடும்பத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

மேலும் விரைவாக குடியிருப்பு வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...