முதலில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்..!' - காவல் ஆணையரிடம் கோவை காவலர்கள் குடும்பத்தினர்!

கோவை உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பில் விஷ பூச்சிகள் நடமாட்டம் காரணமாக, அங்கு மண்டி கிடக்கும் புதர்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி காவலர்கள் குடும்பத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் மண்டியுள்ள புதர்களை அகற்றகோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உப்பிலிபாளையம் பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 400 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக தூய்மை பணிகளை மேற்கொள்ளாததால் புதர் மண்டி கிடப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால், குழந்தைகளுடன் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கூறும் காவலர்களின் குடும்பத்தினர் விஷபூச்சிகளின் காரணமாக பெரும்பாலான காவலர்கள் குடியிருப்பை காலி செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

உதவி ஆணையர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்களின் குடும்பத்தினர் என சுமார் 40 குடும்பங்கள் வசித்து வரும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற வலியுறுத்தி காவலர்களின் குடும்பத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

மேலும் விரைவாக குடியிருப்பு வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...