வால்பாறையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில், யாருக்கும் அதிஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வால்பாறைக்கு வந்து சேர்ந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 40 க்கும் மேற்பட்ட அரசு பேருந்து இயங்கி வருகிறது.

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், பழனி, சாலகுடி, மன்னார்குடி போன்ற பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படுகிறது.

இன்று காலை வெள்ளைமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் 40 க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் பயணிகள் இருந்தனர்.

அதேபோல், வால்பாறையில் இருந்து சின்கோனா எஸ்டேட் பகுதிக்கும் ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் பள்ளி ஆசிரியர்கள் எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பயணிகள் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர்.



கூலாங்கள் ஆற்று பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு சாலையின் ஒரு பகுதியில் மண்ணை தோண்டி எடுத்துப் போடப்பட்டிருந்தது.



இந்நிலையில், அரசு பேருந்துகள் எதிர் எதிரே வரும்போது விலகி செல்ல வழி இல்லாமல் போனதால், இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



அதில் ஒரு பழைய பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தால், பேருந்தில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



இந்த விபத்தால், பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து வால்பாறை வந்து சேர்ந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...