வால்பாறையில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில், யாருக்கும் அதிஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வால்பாறைக்கு வந்து சேர்ந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 40 க்கும் மேற்பட்ட அரசு பேருந்து இயங்கி வருகிறது.

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், பழனி, சாலகுடி, மன்னார்குடி போன்ற பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படுகிறது.

இன்று காலை வெள்ளைமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் 40 க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் பயணிகள் இருந்தனர்.

அதேபோல், வால்பாறையில் இருந்து சின்கோனா எஸ்டேட் பகுதிக்கும் ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. அதில் பள்ளி ஆசிரியர்கள் எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பயணிகள் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர்.



கூலாங்கள் ஆற்று பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு சாலையின் ஒரு பகுதியில் மண்ணை தோண்டி எடுத்துப் போடப்பட்டிருந்தது.



இந்நிலையில், அரசு பேருந்துகள் எதிர் எதிரே வரும்போது விலகி செல்ல வழி இல்லாமல் போனதால், இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



அதில் ஒரு பழைய பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தால், பேருந்தில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



இந்த விபத்தால், பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து வால்பாறை வந்து சேர்ந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...