ஊட்டி ஒன்றியத்தில் குடிநீர் விவசாய நிலங்களுக்கு விற்பதாக பொதுமக்கள் புகார்

உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர் மலை மற்றும் கல்லட்டி பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரை ஆபரேட்டர்களின் உதவியுடன் விவசாயத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


நீலகிரி: அழகர் மலைப்பகுதிக்கு மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர் மலை மற்றும் கல்லட்டி பகுதிகளுக்கு இடைப்பட்ட விவசாய நிலங்களில், பிரதம மந்திரியின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வந்தது.

தற்போது பணிகள் முடிவடைந்து, அழகர் மலைப்பகுதிக்கு மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் வழங்குவதில்லை. மாறாக இப்பகுதியில் பணிபுரியும் குடிநீர் பம்பு ஆபரேட்டர்களின் உதவியுடன் பைக்காரா கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர், விவசாய பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் எடுப்பதால் அழகர் மலைப் பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம்,தண்ணீரை குடிநீராக மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...