வனத்துறை சார்பில் மலைக் கிராமங்களில் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு கூட்டம்

கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும், அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாகவும், வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருகத் தொடங்குவதால், காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால் உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள மலைக் கிராமங்களில் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது.


திருப்பூர்: காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அதிகாரிகள் மலைவாழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனக்கோட்டத்தில் கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும், அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருகத் தொடங்குவதால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது.



இதைக் கருத்தில் கொண்டு திருப்பூர் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம் பட்டி, கோடந்தூர், பொருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டுகளிலும், வன எல்லையில் உள்ள கிராமங்களிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன்படி கோடந்தூர்,தளிஞ்சி மலைவாழ் மக்களுக்கும், குதிரையாறு அணை தொடக்கப்பள்ளியிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.



இதில் உடுமலைப்பேட்டை வனச்சரகர் சிவக்குமார், அமராவதி வனச்சரகர் சுரேஷ், கொழுமம் வனச்சரகர் மகேஷ் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...