ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக உள்ளது - சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து

ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக உள்ளதாகவும், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ்., மையங்களாக மத்திய அரசு செயல்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து.



கோவை: ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு நேரெதிராக இடதுசாரிகள் சித்தாந்தம் உள்ளதால் பாஜகவின் இறுதிக்கட்ட இலக்கு என்பது இடதுசாரிகளாகவே இருக்கும் என்றும், ஆனால், மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட சி.பி.ஐ அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், பாஜகவை சேர்ந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்படுவதாகவும், ஆளுநர்கள் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக உள்ளதாக கூறிய அவர், ஆளுநர் என்பதற்கு பொருள் என்ன என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநர் சனாதன கருத்துகள் தெரிவித்து வருவது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், மாநிலத்திற்கு மாநிலம் வேறு கட்சிகளாக இருந்தாலும், அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துகொண்டு பாஜகவிற்கு எதிராக நாட்டை பாதுகாக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் செயல்பட வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சி என்பது நிராகரிக்க முடியாது என்றும், கட்சிகளிடையே முரண்பாடு இருந்தாலும், அதைக் கடந்து ஆர்.எஸ்.எஸ்.சை, பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து நாட்டை காக்க பொதுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றவர், பாஜக ஆட்சியைப் பிடித்தவுடன், இடதுசாரிகள் வீழ்ந்து வருவது என்பதைத் தான் ஏற்கவில்லை என்றும், தேர்தல் அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டார்.

மேலும் அரசியல் கொள்கையில் தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கு நீடிப்பதனால் தான் சமீபத்தில், பிரதமர் கம்யூனிசம் என்பது அபாயகரமான சித்தாந்தம், அழிவை ஏற்படுத்தி விட்டு போய்விடும் என்று சொன்னதை குறிப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்திற்கு நேரெதிராக இடதுசாரிகள்சித்தாந்தம் உள்ளதால் பாஜகவின் இறுதிக்கட்ட இலக்கு என்பது இடதுசாரிகளாகவே இருக்கும் என்றும், ஆனால், மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக டி.ராஜாவை தமிழ்நாடு பலசமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...