சொத்து வரி ரூ.1.25 கோடி நிலுவை - முன்னாள் எம்.பி-க்கு சொந்தமான கட்டிடத்தில் 3 கடைகளுக்கு சீல்!

கோவையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான சேரன் டவர் என்ற கட்டிடத்தில் 3 கடைகளுக்கான சொத்து வரி ரூ.1.25 கோடி நிலுவையில் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.


கோவை: கோவையில் சுமார் ரூ.1.25 கோடி சொத்து வரி நிலுவை காரணமாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான கட்டிடத்தில் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி சொத்து வரி வசூல் செய்வதில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சொத்து வரி கட்டாத வணிக வளாகங்களில் இருக்கும் கடைகளுக்கு சீல் வைத்து வருகிறது.



இதனிடையே கோவை மாநகராட்சி எல்லைகளில் சமீப காலமாக சொத்து வரி கட்டாத கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்து உள்ளது. இந்த நிலையில் ரூ.1.25 கோடி ரூபாய் வரி செலுத்தாமல் நிலுவையில் இருந்ததால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி., பழனிசாமிக்கு சொந்தமான சேரன் டவரில் உள்ள 3 கடைகளுக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



மேலும் சீல் வைத்த கடைகளுக்கு முன்பு சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.



இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த கே.சி.பழனிசாமி மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே வளாகத்தில் உள்ள சில கடைகளை விற்பனை செய்து விட்டதாகவும், அதற்கான வரியை அந்த கடை உரிமையாளரே செலுத்துவார்கள் என தெரிவித்தார்.

ஆனால் விற்பனை செய்யப்பட்ட கடை உரிமையாளரின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் சேரன் டவர் பெயரிலேயே இருப்பதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

சொத்து வரி பாக்கியின் காரணமாக முன்னாள் எம்.பி. கேசி பழனிசாமிக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...